கொழிஞ்சிவாடியில் உள்ள சொக்கநாதர் கோவில் சன்னதியின் வாயிலில் காணப்படும் கல்வெட்டு: 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தர பாண்டியன் காலத்தில் காவன்-சடையம்மை வெள்ளாள தம்பதியினர் திருநிலைக்கால்(தூண்கள்) தர்மம் கொடுத்தது.
க. விஜய நகர வேந்தன் தேவராயன் - 15ம் நூற்றாண்டு காலத்தில் இவ்வூரின் (கொழிஞ்சிப்பாடி) பெயர் நரையனுர் நாடு - உடையபிராட்டி சதுர்வேதிமங்கலம் என்பதாகும் . இந்த கோவிலின் பெயர் - அழகிய சொக்கனார் கோவில் , அருகில் உள்ள இடம் அழகிய சொக்கபுரம் (இன்றைய மீனாட்சிபுரம் - சொக்கநாதபாளையம்) .
14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர பாண்டிய தேவரின் உபய கல்வெட்டு
கோயில் துலுக்கவாணத்தில் இறங்கல்பட்டு அதாவது இஸ்லாமியர் வெடியால் இடிந்துபட மாயநாயக்கருக்கு தர்மமாக தரங்கையா மன்றாடியார் திருப்பணி செய்து சீர்செய்தமையைக் குறிப்பிடுகிறது.
Thanks for sharing the history of Kolinjivadi and about the Chokkanathar temple. Please share information about the current state of the temple and the photo of the temple
ReplyDelete